×

போதை மருந்து கடத்தல் தலைவன் முகமது இம்ரான் தமிழ்நாட்டில் ஊடுருவலா?.. கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்

சென்னை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

கடலோரக் காவல்படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags : Drug Traffic Leader ,Mohammed Imran ,Tamil ,Nadu ,Annmani , Narcotics smuggling, leader Mohammad Imran, Anbumani emphasized
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...